பக்கங்கள்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ALIENS 3

                                   உலகின் மர்மங்கள்                  

 ஏலியன்ஸ் & UFO:

                                                         சென்ற பதிவில் உலக வரலாறுகளில் உள்ள வேற்று கிரக வாசிகள் பற்றிய மர்மங்களை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் தற்காலத்தில் வெளி உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டிருக்கும் மர்மங்களை பற்றி பார்க்கலாம்.
                                                                           

                                                         நிலவின்  இரகசியம் 

                            


                         நிலவு என்பது நமது பூமியின் ஒரே துணைக்கோள்.இது பூமியிலிருந்து சுமார் 3,84,400 கி.மீ தொலைவிலுள்ளது.

                           நிலவுதான் நம்மால் இந்த அண்டத்தில் விரைவில் எட்ட முடிந்த கோள்.எனவே நிலவை தொடுவதே மனிதர்களின் வானியல் ஆய்வின் முதல் குறிகோளாக இருந்தது.

                         அதற்கான முயற்சிகளை முதன் முதலில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டி போட்டுகொண்டு செய்தன,ஆனால் எப்போதும் போல முதலில் வென்றது அமெரிக்காதான்.
                                                 
                         
                          1969,ஜூலை 20ஆம் நாள் அமெரிக்காவின் அப்போல்லோ 11 என்ற விண்கலம் நீல் ஆம்ஸ்ட்ராங்,பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கல் கொலின்ஸ் என்ற மூன்று மனிதர்களை தாங்கி நிலவில் இறங்கியது.பின் நீள் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கி  அமெரிக்க தேசிய கோடியை நிலவில் நட்டு விட்டு வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தனர்.
                            
                          இது பள்ளியிலேயே படித்த விஷயம் இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?இந்த வரலாறே தவறு என்று சொன்னால் நமபுவீர்களா.நம்புவது கொஞ்சம் கடினம்தான்.ஆனால் இபோது வெளிவந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ரகசியங்களையும் அலசி ஆராயும்போது நம்பித்தான் ஆக வேண்டும்.என்ன அவை வாருங்கள் அவற்றையும் பாப்போம். 

                        1969 ஜூலை 20 வரல்லாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெற போவதால் அமெரிக்காவே பெரும் எதிபார்போடு இருந்தது,நாசாவிலிருந்து ரேடியோ வாயிலாகவும்,தொலைக்காட்சி வாயிலாகவும் நிலவில் இறங்கும் நிகழ்வு நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.எலோரும் ஆர்வமாக கவனித்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஒலிபரப்பு இரண்டு நிமிடம் தடைப்பட்டது.பின்னர் மீண்டும் ஒலிபரப்பு கிடைக்க நிலவில் விண்கலம் இறங்கியதாக அறிவிக்கப்பட எல்லோரும் உற்சாகமடைந்தனர்.ஆனால் ஒலிபரப்பு தடைபட காரணம் இரண்டு தொலைக்காட்சி கேமராக்கள் சூடு அதிகமாகி ஒளிபரப்பை நிறுத்தியதாக நாசா தெரிவித்தது.ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

                   

                  திமோதி  குட்   1988இல் எழுதிய எபவ் டாப் சீக்ரெட்(ABOVE TOP SECRET)
  எனும் நூலில் உண்மையில் நாசாவில் நடந்தது என்ன என்பதை விரிவாக கூறியுள்ளார்   

                    தடைபட்ட அந்த இரண்டு  நிமிடங்கள் அப்போல்லோ 11 வின்கலதுக்கும் நாசாவுக்கும் நடந்த ரேடியோ உரையாடல் தமிழாக்கத்தில்,


 விண்வெளி கட்டுபாட்டு மையம்: விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அழைக்கிறோம் அப்போல்லோ 11 அங்கு என்ன நடக்கிறது.....

அப்போல்லோ 11:இவை மிகவும் பெரிதாக உள்ளன.ஓ ...ஆச்சரியம் ....கடவுளே.சார் ....இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள் இங்கே  நமக்கு அருகில் வேறு சில    பெரிய   விண்கலங்கள் உள்ளன.அவை எங்களை கண்காணிப்பதை போல் உள்ளது.  

              அந்த சமயத்தில் அவர்களது விண்கலத்தை இரண்டு பெரும் UFO-க்கள்  பின் தொடர்ந்ததாக சில நாசா விஞ்ஞானிகள் தெரிவித்ததாக செய்திகள் உலா வந்தன.

             ஆனால் நாசாவிடம் அதை பற்றி எந்த தகவலும் இல்லை.

                                   ufo-armstrong2.jpg - 2447,0 K
          நிலவின் பரப்பில் காணப்பட்ட மிகப்பெரிய விண்கலம்  என நீள் ஆம்ஸ்ட்ராங்கால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம். 
             
      இதன்   பின்னர் பல அப்போல்லோ விண்கலங்கள் (APOLLO 12,13,14,15,16,17) 
  நிலவுக்கு சென்று திரும்பின.ஆனால் அவை ஒவ்வொன்ற்றும் ஒவ்வொரு முறையும் UFOவால் பிந்தொடரபட்டதாக நாசாவிலிருந்து தகவல்கள் கசிந்தன.

            நாசா விஞ்ஞானிகளால் நிலவில் எடுக்கப்பட்ட UFO புகைப்படங்கள் :

                                                       
                                                          பஸ் ஆல்ட்ரின் (APOLLO 11)

                                              
                                                        நீல் ஆம்ஸ்ட்ராங் (APOLLO 11)

                                              
                                                        பிரான்க் போர்மன் (GEMINI 7)

                                              
                                                      நீல் ஆம்ஸ்ட்ராங் (APOLLO 11) 

                                              
                                                            ஜான் க்லென் (மெர்குரி 1)

                                      
                                                          நீல் ஆம்ஸ்ட்ராங் (APOLLO 11)

                  அமெரிக்காவை போலவே பல நாடுகள்(ரஷ்யா,சீனா,ஐரோப்பா,இந்தியா) நிலவுக்கு ஆள் இல்லா வின் கலங்களை அனுப்பி சோதனைகள் செய்துள்ளன அவையும் சில விசித்திர புகைப்படங்களை வெளியிட்டுள்ளன,அவற்றிலும் சில கட்டமைப்புகள் காணப்படுகின்றன ஆள் இல்லா  நிலவில் யார் கட்டமைப்புகளை அமைக்க முடியும்?
                                                 
                எனவே சில வேற்றுலக வாழ்வு ஆராய்ச்சியாளர்கள்,நிலவில் வெற்றுக்ரகவாசிகள் தங்கள் கட்டமைப்புகளை அமைத்து அங்கிருந்து அடிக்கடி பூமிக்கு வந்து செல்வதாக கூறுகின்றனர்.

               ஆனால் பூமியில் உயிர்கள் வாழும்போது விண்வெளியில் இருந்து பார்த்தல் நம்  கட்டமைப்புகள் தெளிவாக தெரியும்.அப்படியானால் நிலவிலும் தெரிய வேண்டுமே என கேள்வி எழலாம். பூமியை நிலவு சுற்றும்போது ஒரு பக்கத்தை மட்டும் காட்டியபடி சுற்றும் எனவே நம்மால் இன்னொரு பக்கத்தை பார்க்க முடியாது.ஆனால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது நிலவின் இன்னொரு புரத்தில்தான் எனவே நிலவின் மற்றொரு பக்கத்தில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இதை பற்றி நிலவை ஆராய்ச்சி செய்யும் எந்த ஒரு அரசாங்கமும் வெளிப்படையாக கூறியதில்லை.

                ஏனென்றால் அவர்களுக்கு இது என்னவென்று விளக்க முடியாது எனவே மெளனமாக இருக்கின்றனர் .இதை பற்றி ஆராய்பவர்களும் தடுக்கபடுகின்றனர்.எனினும் அடுத்ததாக இந்தியா அனுப்பும் சந்திராயன் 2 மூலம் பல உண்மைகள் வெளி வரலாம்.

                இது போன்று இன்னும் பல மர்மங்கள் மறைந்துள்ளன அவற்றை அடுத்த பதிவுகளில் காணலாம்.


           உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.

                       

               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக