பக்கங்கள்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

ALIENS 3

                                   உலகின் மர்மங்கள்                  

 ஏலியன்ஸ் & UFO:

                                                         சென்ற பதிவில் உலக வரலாறுகளில் உள்ள வேற்று கிரக வாசிகள் பற்றிய மர்மங்களை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் தற்காலத்தில் வெளி உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டிருக்கும் மர்மங்களை பற்றி பார்க்கலாம்.
                                                                           

                                                         நிலவின்  இரகசியம் 

                            


                         நிலவு என்பது நமது பூமியின் ஒரே துணைக்கோள்.இது பூமியிலிருந்து சுமார் 3,84,400 கி.மீ தொலைவிலுள்ளது.

                           நிலவுதான் நம்மால் இந்த அண்டத்தில் விரைவில் எட்ட முடிந்த கோள்.எனவே நிலவை தொடுவதே மனிதர்களின் வானியல் ஆய்வின் முதல் குறிகோளாக இருந்தது.

                         அதற்கான முயற்சிகளை முதன் முதலில் அமெரிக்காவும் ரஷ்யாவும் போட்டி போட்டுகொண்டு செய்தன,ஆனால் எப்போதும் போல முதலில் வென்றது அமெரிக்காதான்.
                                                 
                         
                          1969,ஜூலை 20ஆம் நாள் அமெரிக்காவின் அப்போல்லோ 11 என்ற விண்கலம் நீல் ஆம்ஸ்ட்ராங்,பஸ் ஆல்ட்ரின் மற்றும் மைக்கல் கொலின்ஸ் என்ற மூன்று மனிதர்களை தாங்கி நிலவில் இறங்கியது.பின் நீள் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் இறங்கி  அமெரிக்க தேசிய கோடியை நிலவில் நட்டு விட்டு வெற்றிகரமாக பூமியை வந்தடைந்தனர்.
                            
                          இது பள்ளியிலேயே படித்த விஷயம் இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?இந்த வரலாறே தவறு என்று சொன்னால் நமபுவீர்களா.நம்புவது கொஞ்சம் கடினம்தான்.ஆனால் இபோது வெளிவந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு ரகசியங்களையும் அலசி ஆராயும்போது நம்பித்தான் ஆக வேண்டும்.என்ன அவை வாருங்கள் அவற்றையும் பாப்போம். 

                        1969 ஜூலை 20 வரல்லாற்று சிறப்பு மிக்க நிகழ்வு நடைபெற போவதால் அமெரிக்காவே பெரும் எதிபார்போடு இருந்தது,நாசாவிலிருந்து ரேடியோ வாயிலாகவும்,தொலைக்காட்சி வாயிலாகவும் நிலவில் இறங்கும் நிகழ்வு நேரடியாக ஒலிபரப்பு செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.எலோரும் ஆர்வமாக கவனித்து கொண்டிருக்கும் வேளையில் திடீரென ஒலிபரப்பு இரண்டு நிமிடம் தடைப்பட்டது.பின்னர் மீண்டும் ஒலிபரப்பு கிடைக்க நிலவில் விண்கலம் இறங்கியதாக அறிவிக்கப்பட எல்லோரும் உற்சாகமடைந்தனர்.ஆனால் ஒலிபரப்பு தடைபட காரணம் இரண்டு தொலைக்காட்சி கேமராக்கள் சூடு அதிகமாகி ஒளிபரப்பை நிறுத்தியதாக நாசா தெரிவித்தது.ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

                   

                  திமோதி  குட்   1988இல் எழுதிய எபவ் டாப் சீக்ரெட்(ABOVE TOP SECRET)
  எனும் நூலில் உண்மையில் நாசாவில் நடந்தது என்ன என்பதை விரிவாக கூறியுள்ளார்   

                    தடைபட்ட அந்த இரண்டு  நிமிடங்கள் அப்போல்லோ 11 வின்கலதுக்கும் நாசாவுக்கும் நடந்த ரேடியோ உரையாடல் தமிழாக்கத்தில்,


 விண்வெளி கட்டுபாட்டு மையம்: விண்வெளி கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அழைக்கிறோம் அப்போல்லோ 11 அங்கு என்ன நடக்கிறது.....

அப்போல்லோ 11:இவை மிகவும் பெரிதாக உள்ளன.ஓ ...ஆச்சரியம் ....கடவுளே.சார் ....இதை நீங்கள் நம்ப மாட்டீர்கள் இங்கே  நமக்கு அருகில் வேறு சில    பெரிய   விண்கலங்கள் உள்ளன.அவை எங்களை கண்காணிப்பதை போல் உள்ளது.  

              அந்த சமயத்தில் அவர்களது விண்கலத்தை இரண்டு பெரும் UFO-க்கள்  பின் தொடர்ந்ததாக சில நாசா விஞ்ஞானிகள் தெரிவித்ததாக செய்திகள் உலா வந்தன.

             ஆனால் நாசாவிடம் அதை பற்றி எந்த தகவலும் இல்லை.

                                   ufo-armstrong2.jpg - 2447,0 K
          நிலவின் பரப்பில் காணப்பட்ட மிகப்பெரிய விண்கலம்  என நீள் ஆம்ஸ்ட்ராங்கால் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படம். 
             
      இதன்   பின்னர் பல அப்போல்லோ விண்கலங்கள் (APOLLO 12,13,14,15,16,17) 
  நிலவுக்கு சென்று திரும்பின.ஆனால் அவை ஒவ்வொன்ற்றும் ஒவ்வொரு முறையும் UFOவால் பிந்தொடரபட்டதாக நாசாவிலிருந்து தகவல்கள் கசிந்தன.

            நாசா விஞ்ஞானிகளால் நிலவில் எடுக்கப்பட்ட UFO புகைப்படங்கள் :

                                                       
                                                          பஸ் ஆல்ட்ரின் (APOLLO 11)

                                              
                                                        நீல் ஆம்ஸ்ட்ராங் (APOLLO 11)

                                              
                                                        பிரான்க் போர்மன் (GEMINI 7)

                                              
                                                      நீல் ஆம்ஸ்ட்ராங் (APOLLO 11) 

                                              
                                                            ஜான் க்லென் (மெர்குரி 1)

                                      
                                                          நீல் ஆம்ஸ்ட்ராங் (APOLLO 11)

                  அமெரிக்காவை போலவே பல நாடுகள்(ரஷ்யா,சீனா,ஐரோப்பா,இந்தியா) நிலவுக்கு ஆள் இல்லா வின் கலங்களை அனுப்பி சோதனைகள் செய்துள்ளன அவையும் சில விசித்திர புகைப்படங்களை வெளியிட்டுள்ளன,அவற்றிலும் சில கட்டமைப்புகள் காணப்படுகின்றன ஆள் இல்லா  நிலவில் யார் கட்டமைப்புகளை அமைக்க முடியும்?
                                                 
                எனவே சில வேற்றுலக வாழ்வு ஆராய்ச்சியாளர்கள்,நிலவில் வெற்றுக்ரகவாசிகள் தங்கள் கட்டமைப்புகளை அமைத்து அங்கிருந்து அடிக்கடி பூமிக்கு வந்து செல்வதாக கூறுகின்றனர்.

               ஆனால் பூமியில் உயிர்கள் வாழும்போது விண்வெளியில் இருந்து பார்த்தல் நம்  கட்டமைப்புகள் தெளிவாக தெரியும்.அப்படியானால் நிலவிலும் தெரிய வேண்டுமே என கேள்வி எழலாம். பூமியை நிலவு சுற்றும்போது ஒரு பக்கத்தை மட்டும் காட்டியபடி சுற்றும் எனவே நம்மால் இன்னொரு பக்கத்தை பார்க்க முடியாது.ஆனால் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டது நிலவின் இன்னொரு புரத்தில்தான் எனவே நிலவின் மற்றொரு பக்கத்தில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இதை பற்றி நிலவை ஆராய்ச்சி செய்யும் எந்த ஒரு அரசாங்கமும் வெளிப்படையாக கூறியதில்லை.

                ஏனென்றால் அவர்களுக்கு இது என்னவென்று விளக்க முடியாது எனவே மெளனமாக இருக்கின்றனர் .இதை பற்றி ஆராய்பவர்களும் தடுக்கபடுகின்றனர்.எனினும் அடுத்ததாக இந்தியா அனுப்பும் சந்திராயன் 2 மூலம் பல உண்மைகள் வெளி வரலாம்.

                இது போன்று இன்னும் பல மர்மங்கள் மறைந்துள்ளன அவற்றை அடுத்த பதிவுகளில் காணலாம்.


           உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.

                       

               

வியாழன், 13 பிப்ரவரி, 2014

ALIENS 2

                                  உலகின் மர்மங்கள் 



ஏலியன்ஸ் & UFO    

                                   எனது முந்தைய பதிவிற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.அதுவே என்னை மேலும் ஏலியன்ஸ் பற்றி ஆராய்ந்து எழுத தூண்டியுள்ளது.இப்பதிவில் மேலும் புதிய தகவல்களை அளிக்க உள்ளேன்.                                                                                                                                                                                                                         
                                           பண்டைய வரலாறுகளில் UFO:  

          இந்தியா                       
                                                 முதலில் நமது இந்திய வரலாற்றிலிருந்தே துவங்கலாம் என்றிருக்கிறேன்.
     
    விமானங்கள் :
                                                            
                                நமது பண்டைய இந்தியாவில் இரு பெரும் இதிகாசங்கள் தோன்றின.அவை ராமாயணம்,மகாபாரதம் இவற்றை நாம் வெறும் சமய நூல்களாகவே பார்கின்றோம்.ஆனால் இவற்றுள் மிகப்பெரும் அறிவியல் உள்ளதை அயல்நாட்டினர் கண்டறிந்துள்ளனர்.அவை விமானங்கள் (VIMANAS)

                                                              இது வெறும் கதையாக பார்க்கும்போது கற்பனையாக தோன்றலாம்,ஆனால் எந்த கற்பனை தோன்றுவதற்கும் ஒரு முன்மாதிரி(INSPIRATIONS ) வேண்டும் .அக்காலத்தில் போக்குவரத்தே கால்நடைகளை நம்பித்தான் .ஆனால் இந்த விமானங்கள் பறவைகள் போன்ற இறகுகளுடன் பறந்து செல்வதாக கூறியுள்ளனர்.அப்படியானால் அவர்கள் அதனை போன்ற ஏதோ ஒன்றை கண்டிருக்க வேண்டும் அல்லது காண கேட்டிருக்க வேண்டும்.இது வெறும் கற்பனை என்று புறக்கணிக்க நினைப்போருக்கு மேலும் ஒரு ஆதாரத்தை முன்வைக்க நினைக்கிறேன்.

                      அது "விமான சாஸ்திரம் ( VIMANA SASTRA )  எனும் சமஸ்கிருத நூல். இது 20ஆம் நூற்றாண்டை சேர்ந்த  நூல்.இந்நூலில் தற்கால ராக்கெட்டை (ROCKET ) ஒத்த வேகமுடைய விமானங்களை பற்றி கூறப்பட்டுள்ளது.இதனை 1952ஆம் ஆண்டு .G.R.ஜோஷ்யர் வெளியிட்டார்,இந்நூலை  பண்டிதர் சுப்பராய சாஸ்திரி என்பவர்  எழுதியதாகவும்,இது பண்டிதருக்கு  பரத்வாஜ முனிவர் அவர்களால் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .

                        
           

                                                            
                                 இந்நூலில் பல விமான வடிவமைப்பு வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இவை தற்கால விமான தொழில்நுட்பத்துடன் ஓரளவு ஒத்துபோகின்றன .பழைய நூல் பிரதிகளை தொகுத்து பெங்களூர் விமான பயிற்சி நிலையம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டுள்ளது.

                                   முனிவர்களும் யோகிகளும் எப்படி விமான வன்பொருள் (HARDWARE)  தொழில்நுட்பங்களை பற்றி அறிந்திருக்க முடியும்.

                                   இந்த விமானங்களை  வடிவமாக கொண்டுதான் இன்றளவும் இந்து கோவில்கள் கட்டப்படுகின்றன.எனவேதான் நாம் கோவில் கோபுரங்களை விமானம் என்று அழைக்கிறோம் 
   
                                இதுவே பழங்காலத்தில் வேற்றுக்ரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளனர் என்பதற்கு முதல் ஆதாரம்.

ப்லொரென்ச் (FLORENCE ):
                                                     


                                 ப்ளோரன்ஸ் பலஸ்சோ வெச்சியோ எனுமிடத்திலுள்ள 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிலிப்போ லிப்பி எனும் பள்ளியிலுள்ள ஓவியம்  மடோன்னா அண்ட் செயின்ட் ஜிஒவன்னினொ ( MADONNA AND SAINT GIOVANNINO) .இதனை வரைந்தவர் டான் பெர்லினெர்.
                                        
                                 இதில் அன்னை மேரியின் பின்புறம் ஒரு மனிதனும் நாயும் வானில் பிரகாசமான ஒன்றை பார்த்துக்கொண்டிருப்பதை போல் வரையப்பட்டுள்ளது.இதுவும் பண்டைய ஏலியன்ஸ் கூற்றுக்கு ஒரு சான்று.

 பெரு :(நாஸ்கா கோடுகள் )(PERUU)(NAZCA LINES)

  
                        

                           பேரு நாட்டிலுள்ள ஒரு பாலைவனத்தில் பிரம்மாண்டமான வரைபடங்கள் காணப்படுகின்றன.இவை ஒவ்வொன்றும் பல்லாயிரம் மீட்டர் நீலமுள்ளவை.இவை அங்கு வாழ்ந்த நாஸ்கா பழங்குடியினரால் வரையப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும்,இவ்வளவு பெரிய ஓவியங்களை அதுவும் இவ்வளவு துல்லியமாக எப்படி வரைய முடியும் என யாராலும் நம்ப முடியவில்லை.
                           ஆனால் இவற்றை நன்கு ஆராயும்போது மிக நீண்ட நேர்கோடுகளாக உள்ளன எனவே இவை முந்தைய காலத்தில் வேற்றுக்ரகவாசிகள் பயன்படுத்திய விமான ஓடுதளங்கள் என நம்பபடுகிறது.

 இத்தாலி(ITALY) :
                     இத்தாலியில் உள்ள வால் கமொனிக்கா எனும் இடத்தில கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியம் இது 
                              
                     
                                         இதில் பல விசித்திர ஓவியங்களும் நடுவில் பாதுகாப்பு உடை அணிந்த விசித்திர உயிரினம் இருப்பதை காணலாம்.இது இன்று வரை புதிராகவே உள்ளது.

 ஆஸ்திரேலியா (AUSTRALIA ):

                                           5000 ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலிய குகை ஓவியங்கள் 
                                         
                              இதில்  விசித்திர உயிரினங்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

 ஜெர்மனி (GERMANY )         
                                   
                                  1697இல் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் மக்கள் வானில் இரு ஒளிரும் பந்துகளை கண்டதாக வரையப்பட்ட ஓவியம்.

யுகோஸ்லாவியா (YUGOSLAVIA)

                              யுகோஸ்லாவியாவில்  உள்ள 1350ஆம் ஆண்டை சேர்ந்த ஏசு சிலுவையில் அறையப்படும் ஓவியம்.  
                                    

                             அதன் இரண்டு ஓரங்களிலும் இருவர் பறக்கும் வாகனங்களை ஒட்டி செல்வது போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளன.
     

    எகிப்து (EGYPT):
                     
                             எகிப்தில் உள்ள பிரமிடுகள் உலகின் மர்மங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது 

                          பல ஆயிரம் டன் எடை கொண்ட கற்களை கொண்டு பாலைவனத்தில் கட்டப்பட்ட ஒரு அதிசயம்.
                          இதை பற்றிய தகவல்களை பலரும் அறிந்துள்ளதால் இதை பற்றி சுருக்கமாக கூறி முடிக்கிறேன்.

                         இதன் கட்டமைப்பு,அளவு போன்றவற்றை வைத்து பார்க்கும்போது இது மனிதர்களால் கட்டப்பட சாத்தியமே இல்லை என்பது தெளிவாகிறது.
                          இன்னொரு அதிசய தகவல் நீங்கள் பிரமிட் அருகில் நின்றால் சாதாரண சமவெளியில் நிற்பவரை காட்டிலும் உங்கள் கடிகாரம் 10 நிமிடம் தாமதமாக ஓடும்.அதாவது நீங்கள் மற்றவரை காட்டிலும் 10நிமிட நேரத்தை மெதுவாக கடப்பீர்கள்.



இது போன்று பல மர்மங்கள் பண்டைய காலம் முதலே மனித இனத்தை சிந்திக்க வைத்தாலும்.இன்றும் பல மர்மங்கள் வெளி உலகின் கண்களில் இருந்து மறைந்துள்ளன மறைக்கப்பட்டுள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
                                                                                
                                                                                

    உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.