பக்கங்கள்

வியாழன், 13 பிப்ரவரி, 2014

ALIENS 2

                                  உலகின் மர்மங்கள் 



ஏலியன்ஸ் & UFO    

                                   எனது முந்தைய பதிவிற்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.அதுவே என்னை மேலும் ஏலியன்ஸ் பற்றி ஆராய்ந்து எழுத தூண்டியுள்ளது.இப்பதிவில் மேலும் புதிய தகவல்களை அளிக்க உள்ளேன்.                                                                                                                                                                                                                         
                                           பண்டைய வரலாறுகளில் UFO:  

          இந்தியா                       
                                                 முதலில் நமது இந்திய வரலாற்றிலிருந்தே துவங்கலாம் என்றிருக்கிறேன்.
     
    விமானங்கள் :
                                                            
                                நமது பண்டைய இந்தியாவில் இரு பெரும் இதிகாசங்கள் தோன்றின.அவை ராமாயணம்,மகாபாரதம் இவற்றை நாம் வெறும் சமய நூல்களாகவே பார்கின்றோம்.ஆனால் இவற்றுள் மிகப்பெரும் அறிவியல் உள்ளதை அயல்நாட்டினர் கண்டறிந்துள்ளனர்.அவை விமானங்கள் (VIMANAS)

                                                              இது வெறும் கதையாக பார்க்கும்போது கற்பனையாக தோன்றலாம்,ஆனால் எந்த கற்பனை தோன்றுவதற்கும் ஒரு முன்மாதிரி(INSPIRATIONS ) வேண்டும் .அக்காலத்தில் போக்குவரத்தே கால்நடைகளை நம்பித்தான் .ஆனால் இந்த விமானங்கள் பறவைகள் போன்ற இறகுகளுடன் பறந்து செல்வதாக கூறியுள்ளனர்.அப்படியானால் அவர்கள் அதனை போன்ற ஏதோ ஒன்றை கண்டிருக்க வேண்டும் அல்லது காண கேட்டிருக்க வேண்டும்.இது வெறும் கற்பனை என்று புறக்கணிக்க நினைப்போருக்கு மேலும் ஒரு ஆதாரத்தை முன்வைக்க நினைக்கிறேன்.

                      அது "விமான சாஸ்திரம் ( VIMANA SASTRA )  எனும் சமஸ்கிருத நூல். இது 20ஆம் நூற்றாண்டை சேர்ந்த  நூல்.இந்நூலில் தற்கால ராக்கெட்டை (ROCKET ) ஒத்த வேகமுடைய விமானங்களை பற்றி கூறப்பட்டுள்ளது.இதனை 1952ஆம் ஆண்டு .G.R.ஜோஷ்யர் வெளியிட்டார்,இந்நூலை  பண்டிதர் சுப்பராய சாஸ்திரி என்பவர்  எழுதியதாகவும்,இது பண்டிதருக்கு  பரத்வாஜ முனிவர் அவர்களால் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது .

                        
           

                                                            
                                 இந்நூலில் பல விமான வடிவமைப்பு வரைபடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.இவை தற்கால விமான தொழில்நுட்பத்துடன் ஓரளவு ஒத்துபோகின்றன .பழைய நூல் பிரதிகளை தொகுத்து பெங்களூர் விமான பயிற்சி நிலையம் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிட்டுள்ளது.

                                   முனிவர்களும் யோகிகளும் எப்படி விமான வன்பொருள் (HARDWARE)  தொழில்நுட்பங்களை பற்றி அறிந்திருக்க முடியும்.

                                   இந்த விமானங்களை  வடிவமாக கொண்டுதான் இன்றளவும் இந்து கோவில்கள் கட்டப்படுகின்றன.எனவேதான் நாம் கோவில் கோபுரங்களை விமானம் என்று அழைக்கிறோம் 
   
                                இதுவே பழங்காலத்தில் வேற்றுக்ரகவாசிகள் பூமிக்கு வந்துள்ளனர் என்பதற்கு முதல் ஆதாரம்.

ப்லொரென்ச் (FLORENCE ):
                                                     


                                 ப்ளோரன்ஸ் பலஸ்சோ வெச்சியோ எனுமிடத்திலுள்ள 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிலிப்போ லிப்பி எனும் பள்ளியிலுள்ள ஓவியம்  மடோன்னா அண்ட் செயின்ட் ஜிஒவன்னினொ ( MADONNA AND SAINT GIOVANNINO) .இதனை வரைந்தவர் டான் பெர்லினெர்.
                                        
                                 இதில் அன்னை மேரியின் பின்புறம் ஒரு மனிதனும் நாயும் வானில் பிரகாசமான ஒன்றை பார்த்துக்கொண்டிருப்பதை போல் வரையப்பட்டுள்ளது.இதுவும் பண்டைய ஏலியன்ஸ் கூற்றுக்கு ஒரு சான்று.

 பெரு :(நாஸ்கா கோடுகள் )(PERUU)(NAZCA LINES)

  
                        

                           பேரு நாட்டிலுள்ள ஒரு பாலைவனத்தில் பிரம்மாண்டமான வரைபடங்கள் காணப்படுகின்றன.இவை ஒவ்வொன்றும் பல்லாயிரம் மீட்டர் நீலமுள்ளவை.இவை அங்கு வாழ்ந்த நாஸ்கா பழங்குடியினரால் வரையப்பட்டவை என ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும்,இவ்வளவு பெரிய ஓவியங்களை அதுவும் இவ்வளவு துல்லியமாக எப்படி வரைய முடியும் என யாராலும் நம்ப முடியவில்லை.
                           ஆனால் இவற்றை நன்கு ஆராயும்போது மிக நீண்ட நேர்கோடுகளாக உள்ளன எனவே இவை முந்தைய காலத்தில் வேற்றுக்ரகவாசிகள் பயன்படுத்திய விமான ஓடுதளங்கள் என நம்பபடுகிறது.

 இத்தாலி(ITALY) :
                     இத்தாலியில் உள்ள வால் கமொனிக்கா எனும் இடத்தில கண்டுபிடிக்கப்பட்ட குகை ஓவியம் இது 
                              
                     
                                         இதில் பல விசித்திர ஓவியங்களும் நடுவில் பாதுகாப்பு உடை அணிந்த விசித்திர உயிரினம் இருப்பதை காணலாம்.இது இன்று வரை புதிராகவே உள்ளது.

 ஆஸ்திரேலியா (AUSTRALIA ):

                                           5000 ஆண்டுகள் பழமையான ஆஸ்திரேலிய குகை ஓவியங்கள் 
                                         
                              இதில்  விசித்திர உயிரினங்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.

 ஜெர்மனி (GERMANY )         
                                   
                                  1697இல் ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் மக்கள் வானில் இரு ஒளிரும் பந்துகளை கண்டதாக வரையப்பட்ட ஓவியம்.

யுகோஸ்லாவியா (YUGOSLAVIA)

                              யுகோஸ்லாவியாவில்  உள்ள 1350ஆம் ஆண்டை சேர்ந்த ஏசு சிலுவையில் அறையப்படும் ஓவியம்.  
                                    

                             அதன் இரண்டு ஓரங்களிலும் இருவர் பறக்கும் வாகனங்களை ஒட்டி செல்வது போன்ற படங்கள் இடம் பெற்றுள்ளன.
     

    எகிப்து (EGYPT):
                     
                             எகிப்தில் உள்ள பிரமிடுகள் உலகின் மர்மங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது 

                          பல ஆயிரம் டன் எடை கொண்ட கற்களை கொண்டு பாலைவனத்தில் கட்டப்பட்ட ஒரு அதிசயம்.
                          இதை பற்றிய தகவல்களை பலரும் அறிந்துள்ளதால் இதை பற்றி சுருக்கமாக கூறி முடிக்கிறேன்.

                         இதன் கட்டமைப்பு,அளவு போன்றவற்றை வைத்து பார்க்கும்போது இது மனிதர்களால் கட்டப்பட சாத்தியமே இல்லை என்பது தெளிவாகிறது.
                          இன்னொரு அதிசய தகவல் நீங்கள் பிரமிட் அருகில் நின்றால் சாதாரண சமவெளியில் நிற்பவரை காட்டிலும் உங்கள் கடிகாரம் 10 நிமிடம் தாமதமாக ஓடும்.அதாவது நீங்கள் மற்றவரை காட்டிலும் 10நிமிட நேரத்தை மெதுவாக கடப்பீர்கள்.



இது போன்று பல மர்மங்கள் பண்டைய காலம் முதலே மனித இனத்தை சிந்திக்க வைத்தாலும்.இன்றும் பல மர்மங்கள் வெளி உலகின் கண்களில் இருந்து மறைந்துள்ளன மறைக்கப்பட்டுள்ளன அவற்றை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
                                                                                
                                                                                

    உங்கள் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக