பக்கங்கள்

சனி, 30 மார்ச், 2013

ALIENS

                           உலகின்  மர்மங்கள் 

வேற்றுகிரகவாசிகள்  & UFO

மனிதன் தோன்றிய காலம் முதலே மனித இனத்திற்கே புரியாத புதிர் இந்த ALIENS & UFO.அது இன்றளவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது .
       
              முதலில் UFO என்றால் என்ன என்று தெரிந்து  கொண்ட பின் இதனுள் 
செல்லலாம் என நினைக்கிறேன்.

                                                     UFO   

UFO  என்பதன் விரிவாக்கம் Unidentified  Flying  Object  என்பதாகும் .அதாவது அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் .அவ்வப்போது வானில் சில விசித்திரமான பொருட்கள் பறந்து சென்று மறைந்து விடும்.அவையே ufo  என குறிப்பிடப்படுகின்றன. இது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்லும் வாகனம் என்று நம்பப்படுகிறது .இதன் வரலாற்றை சுருக்கமாக பாப்போம் .

   UFO வரலாறு :

        1878,ஜனவரி 25-இல்  TEXAS  மாகாணத்திலுள்ள DENISON  எனும் நகர தினசரி UFO பற்றிய முதல் செய்தியை வெளியிட்டது ,அதில் அந்நகர விவசாயி  வட்ட வடிவில் வானில் பிரகாசமான ஒலியுடன் அசுர வேகத்தில் சென்ற ஒன்றை கண்டதாக கூறியிருந்தார் .அதில்தான் முதலில் SAUCER (தட்டு) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது .பின்னர் பல UFO  பற்றிய   செய்திகள்  உலவின .
   
           பின்னர் இரண்டாம் உலகபோரின்போது பசிபிக் ,ஐரோபிய  பகுதிகளில் சில விசித்திர பொருட்கள் பறந்து செல்வதாக தகவல்களும் புகைப்படங்களும் வெளியாயின .ஆனால் அவை வேறு விதமாக விளங்கப்பட்டன,அதாவது வானிலை மாற்றங்கள் எனவும் ,வாயுவால் ஏற்பட்ட மாய தோற்றங்கள் எனவும் அல்லது ஜெர்மானிய உளவு விமானங்கள் எனவும் எண்ணப்பட்டது .
    
                 பின்னர் 1947-ம் ஆண்டு மவுண்ட் ரைனேர் எனுமிடத்தில் அமெரிக்க விமானி  கென்னெத் அர்னோல்ட் என்பவர்  9  பிரகாசமான பறக்கும் பொருட்கள் 1200 மைல் வேகத்தில் தன்  விமானத்தை  கடந்து சென்றதாக கூறினார்.இவரே முதன் முதலில் FLYING SAUCER  எனும் வார்த்தையை உபயோகித்தார்.                   

                இதன் பின்னர் 1947-ம் ஆண்டு முதல் அமெரிக்கா UFO -வை பற்றி பல ஆய்வுகளை செய்தது .அவற்றில் சில PROJECT BLUE BOOK,PROJECT SIGN,PROJECT GRUDGE போன்றவை .

             1947-இல் NEW TEXAS-இல்  உள்ள ROSEWELL  எனும் நகரிலுள்ள காட்டில் ஒரு பறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியானது .அதிலிருந்து சில வேற்றுகிரகவாசிகளின் இறந்த உடல்களும் கைப்பற்றப்பட்டதாக புகைப்படங்களும் வெளியானது .ஆனால் அந்நகர மேயர்  அது வானிலை பலூன் என கூறினார் .இதுவே இன்றளவும் UFO வரலாற்றில் ஒரு மிகப்பெரும் மைல் கல் .

              1965-இல் டிசம்பர் 9 அன்று இரவு வானில் பிரகாசமான நெருப்புக்கோளம் ஒன்று பறந்து சென்றது இதனை கனடா நாட்டில் பல மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்தனர் ,இறுதியாக இது பென்சில்வேனியா அருகிலுள்ள கேக்ஸ்பெர்க் எனும் நகரில் விழுந்தது.இது ரஷ்ய செயற்கைக்கோள் என அந்நாட்டு ராணுவம் கூறியது எனினும் அது இன்று வரை ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.இதுவும் ஒரு முக்கிய நிகழ்வு.  

                அதன் பின்பு பல விமானங்கள் பறந்து செல்லும்போது ufo -க்களால் துரத்தப்படுவதும்,விமான விபத்துக்களுக்கும் காரணமாக இருந்தது .

             1997,மார்ச் 13 அன்று அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அம்புக்குறி போன்ற வடிவமுடைய UFO, வானில் தொடர்ந்து 3 மணி நேரம் தென்பட்டது  இதனை அந்நகர மேயர் உட்பட பலர் கண்டனர் .ஆனால் இதற்கு சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை .

             சிலர் இந்த UFO -க்கள் மனிதர்களை கடத்தி செல்வதாகவும் ,அவர்களைக்கொண்டு ஆராய்சிகள் செய்வதாகவும் கூறுகின்றனர்.

1961-இல் HAMPSHIRE  எனுமிடத்தில் BETTY &BARNEY HILLS என்ற தம்பதியர் UFO -வால் சில மணி நேரம் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது ,அவர்கள் அதற்கு பின்னர் சுய நினைவை இழந்து பித்து பிடித்ததைப்போல் இருந்தனர் பின் மனோதத்துவ நிபுணர்கள் மூலமே அவர்கள் மனவசியம் செய்யப்பட்டு தாங்கள் கடத்தப்பட்டதை கூறினார்.

இன்று வரை பலர் தாங்கள் UFO -வால் கடத்தப்பட்டதாக கூறினாலும் இதுவே முதன் முதலில் நடந்த விசித்திர நிகழ்வாகும் .

            இன்றளவும் UFO பற்றிய பல ஆராய்சிகள் நடைபெற்று வருகின்றன ஆனால் இன்னும் சரியான விளக்கம் கொடுக்கப்படவில்லை .இந்த UFO -க்கள் 
உலக வரலாற்றிலும் இடம்பெற்றுள்ளன .அவற்றை பற்றி அடுத்த பதிவில் காணலாம் .















1 கருத்து: